ஒடிசா பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் மற்றும் ஆசிரியை உட்பட ஐந்து பேர் அதிரடி கைது

ஒடிசா பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் மற்றும் ஆசிரியை உட்பட ஐந்து பேர் அதிரடி கைது

ஒடிசா மாநிலம் கேந்திராபராவில் உள்ள ஒரு தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள், ஒரு ஊழியர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒரு ஆசிரியை என மொத்தம் ஐந்து பேரை ராஜ்கனிகா போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளிக்குச் செல்ல மறுத்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பள்ளி நிர்வாகம் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய நிலையில், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டால் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. சுமார் 48 மணி நேர விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகள் பிடிபட்டனர். தற்போது டிஎஸ்பி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *