ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி பும்ராவிற்கு என்ன ஆனது

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அணிகளின் வீரர்கள் ஏற்கனவே பயிற்சியைத் தொடங்கிவிட்ட நிலையில், பும்ரா இன்னும் மும்பை அணியின் பயிற்சி முகாமில் இணையவில்லை. தற்போது அவர் கர்நாடகாவில் உள்ள பிசிசிஐ ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையத்தில் இருப்பதாகக் கூறப்படுவது, அவர் காயத்தால் அவதிப்படுகிறாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, தனது முதல் போட்டியில் மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போராடி வரும் மும்பை அணிக்கு, பும்ராவின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. அவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்கு சென்றாரா அல்லது காயத்தினால் பயிற்சியைத் தவிர்க்கிறாரா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பும்ராவின் இந்த திடீர் விலகல் மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டமிடலில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.