ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி இனி அமலுக்கு வந்தது கிடுக்கிப்பிடி நடத்தை விதிகள்

ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி இனி அமலுக்கு வந்தது கிடுக்கிப்பிடி நடத்தை விதிகள்

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ, அடிக்கல் நாட்டவோ அல்லது அரசு இயந்திரங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தவோ முடியாது. முறையற்ற இடமாற்றங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல் மற்றும் சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பது கடுமையான குற்றமாகக் கருதப்படும். மேலும், உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்யவே இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *