எரிபொருள் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு, ட்ரம்புக்கு கடும் எச்சரிக்கை

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா வரி விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இந்தியா தனது முடிவுகளை தானே எடுக்க முடியும் என்று மாஸ்கோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடும் தனது பொருளாதார நலன்களுக்காக எந்தவொரு நாட்டுடனும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு என்றும், இத்தகைய அழுத்தங்களை கிரெம்ளின் சட்டவிரோதமானது என்று கருதுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘புதிய ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்’ என்று வர்ணித்துள்ளார். வரி விதிப்பதன் மூலம் வரலாற்றை மாற்ற முடியாது என்றும், பிரிக்ஸ் மற்றும் குளோபல் சவுத் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களுடன் இந்தியா முன்னேறும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் இந்தியா சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளது.