எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவின் ரகசிய ஆயுதம் இந்த மூன்று நிலத்தடி எண்ணெய் கிடங்குகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா முழு வீச்சில் தயாராக உள்ளது. தற்போது இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டாலும், இந்த கையிருப்பு நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் உள்ள பிரம்மாண்டமான நிலத்தடி எண்ணெய் கிடங்குகள் இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பின் முதுகெலும்பாக உள்ளன. இயற்கை பேரிடர்கள் மற்றும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட இந்த கிடங்குகள், நாட்டின் 10 நாள் தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவை. பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை சீராக வைத்திருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.