எம்எல்ஏ மனைவியை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சியா? வங்காளத்தில் பயங்கரம்!

பங்கான்: ஒரு மக்கள் பிரதிநிதியின் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? மேற்கு வங்கத்தின் பங்கான் வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ அசோக் கீர்த்தனியாவின் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது, எம்எல்ஏ-வின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவரது மனைவியை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி நடந்ததாகக் கூறப்படும் புகார் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் மோதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் பங்கான் பகுதியை ஸ்தம்பிக்க வைப்போம் என்று எம்எல்ஏ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளுங்கட்சி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், இந்த விவகாரத்தால் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.