உலகக்கோப்பைக்கு முன் சூர்யாவின் தடுமாற்றம்! கேப்டனை மீட்க திலக் வர்மா போட்ட மாஸ்டர் பிளான்
December 21, 2025

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். 2025-ல் விளையாடிய 19 போட்டிகளில் வெறும் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் கேப்டனின் இந்த ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சக வீரர் திலக் வர்மா சூர்யாவுக்கு உதவ முன்வந்துள்ளார். சூர்யா நிலைத்து நின்று விளையாட தான் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதாக திலக் உறுதியளித்துள்ளார். இந்த புதிய உத்தி சூர்யகுமாரை மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.