உறவினர் வீட்டில் விருந்தாளியாக தங்கி ரூ. பல லட்சம் தங்கம் திருட்டு! டெல்லி போலீசார் பிடியில் மருமகன்

உறவினர் வீட்டில் விருந்தாளியாக தங்கி ரூ. பல லட்சம் தங்கம் திருட்டு! டெல்லி போலீசார் பிடியில் மருமகன்

டெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் நடந்த பரபரப்பான திருட்டு வழக்கை டெல்லி போலீசார் வெற்றிகரமாக தீர்த்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த ஆன்லைன் எஃப்ஐஆர்-ல், தன் வீட்டில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் 20 கிராம் தங்க பிஸ்கட் திருடப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவுகள் அல்லது பூட்டுகள் உடைக்கப்படாததைக் கண்டு, திருட்டில் உள் நபரோ அல்லது நன்கு அறிமுகமானவரோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர்.

விசாரணையில், புகார்தாரரின் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த உறவினர் பரமஜித் சிங் என்பவர், சமீபத்தில் மூன்று நாட்கள் அவர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் பரமஜித்திடம் போலீசார் விசாரித்தபோது, தன்னை ‘சப்-இன்ஸ்பெக்டர் பரம்வீர் சிங்’ என்று அறிமுகப்படுத்திய அவர், அடையாள அட்டையை காட்டத் தவறிவிட்டார். தீவிர விசாரணைக்குப் பிறகு, பரமஜித் திருட்டை ஒப்புக்கொண்டார், மேலும் திருடிய தங்கத்தை இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அம்போட்டாவில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டில் கட்டிலுக்குள் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட அனைத்து நகைகளையும் (தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் தங்க பிஸ்கட்) மீட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *