ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் சூழலில் தவிக்கும் தமிழர்களை மீட்க சீமான் அவசர கோரிக்கை

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் சூழலில் தவிக்கும் தமிழர்களை மீட்க சீமான் அவசர கோரிக்கை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள தமிழ் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நிலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கவலை தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் தேடிச் சென்ற தமிழர்கள் அங்கு உணவின்றி தவிப்பதாகவும், குறிப்பாக மீனவர்கள் தாயகம் திரும்ப போதிய பணமின்றி அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். மீட்புப் பணிகளுக்கான பயணச் செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும், தூதரகங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *