ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த சவூதி அரேபியாவுடன் கைகோர்க்கும் உக்ரைன் ஜெலென்ஸ்கியின் மாஸ்டர் பிளான் பலிக்குமா

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவிற்கு ஆதரவாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி களம் இறங்கியுள்ளார். ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ராணுவ உதவிகளை வழங்க அவர் முன்வந்துள்ளார். பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, ரியாத்தின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு உக்ரைன் முழு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ரஷ்யா பயன்படுத்தும் ஈரானிய ‘ஷாஹித்’ ட்ரோன்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவம் தங்களுக்கு இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இந்த போர் அனுபவத்தின் மூலம் ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தை முறியடிப்பதில் உக்ரைன் உலகளவில் சிறந்த திறனைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும், ஈரான் மற்றும் ரஷ்யாவின் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கவும் உக்ரைன் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.