இன்று மாலை முதல் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள் ரூ 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்
March 15, 2026

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதை அடுத்து இன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. இனி அரசு நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பதால் புதிய நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் செய்யவோ அல்லது அரசு வாகனங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தவோ அனுமதி இல்லை.
பொதுமக்கள் தகுந்த ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினரால் அது பறிமுதல் செய்யப்படும். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செலவுகளைக் கண்காணிக்க தீவிர வாகன சோதனைகள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த காவல் துறையின் அனுமதி பெறுவது இனி கட்டாயமாகும்.