இனி நோய் பயமில்லை! உங்கள் குடும்பத்தைக் காக்க வருகிறது ICMR-ன் AI ரோபோ கண்காணிப்பு!

தெரியாத வைரஸ்கள் மற்றும் திடீர் தொற்றுநோய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ‘தேசிய ஒரு ஆரோக்கிய திட்டத்தின்’ (National One Health Mission) கீழ், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறையை ICMR அறிமுகப்படுத்துகிறது.
இந்தத் தொழில்நுட்பம் மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று நிலைகளிலும் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, கொரோனா, நிபா அல்லது ஜிகா போன்ற ஆபத்தான நோய்கள் பரவுவதற்கு முன்பே எச்சரிக்கை விடுக்கும். நோய் பரவிய பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அது உருவாவதற்கு முன்பே தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் பெருமளவில் பாதுகாக்கப்படும்.