இந்தோ-பாக் மோதல்: இலங்கையில் எகிறும் விமானம் மற்றும் ஹோட்டல் கட்டணம்!

இந்தோ-பாக் மோதல்: இலங்கையில் எகிறும் விமானம் மற்றும் ஹோட்டல் கட்டணம்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் உறுதியான நிலையில், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. டெல்லியிலிருந்து கொழும்பு செல்வதற்கான நேரடி விமானக் கட்டணம் தற்போது 1 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது, இது வழக்கமான விலையை விட பல மடங்கு அதிகம். மும்பையிலிருந்தும் பயணக் கட்டணங்கள் இதேபோல் உயர்ந்து வருகின்றன. போட்டி அட்டவணை குறித்த நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு, கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விமானக் கட்டணம் மட்டுமின்றி, கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களின் வாடகையும் ஒரே இரவில் இரட்டிப்பாகியுள்ளது. பிப்ரவரி 14-ஆம் தேதிக்கான ஒரு இரவு ஹோட்டல் கட்டணம் பல இடங்களில் 1 லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது. முன்கூட்டியே திட்டமிட்ட ரசிகர்கள் நிம்மதியடைந்தாலும், காத்திருந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் தற்போது பெரும் பணச் சுமையுடனேயே கேலரிக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *