இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது? விடை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரயில் சந்திப்பு மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா நிலையம் ஆகும். இது பழமையான நிலையங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், நாட்டின் பரபரப்பான ரயில் நிலையமாகவும் அறியப்படுகிறது. இங்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன, மேலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். ஹூக்ளி நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் மொத்தம் 23 நடைமேடைகள் (Platform) மற்றும் 26 ரயில் தடங்கள் உள்ளன, இது ஒரே நேரத்தில் பல ரயில்களை கையாள உதவுகிறது.
1854 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நிலையம் இன்றும் அதன் பெருமையுடன் நிற்கிறது. அதன் அழகுடன், சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது. மேலும், பங்களாதேஷுடன் நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்திய மைத்ரீ எக்ஸ்பிரஸ் இங்கிருந்து இயக்கப்படுகிறது, இது ஹவுரா சந்திப்புக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது.