அதிமுக பொதுச்செயலாளர் ஆகுமா செங்கோட்டையன்? – அரசியல் பரபரப்பு அதிகரிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஆகுமா செங்கோட்டையன்? – அரசியல் பரபரப்பு அதிகரிப்பு

அதிமுகவில் உள்ளமைச் சூழல் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், செங்கோட்டையன் அண்மையில் கட்சியின் முக்கிய கூட்டங்களை புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செங்கோட்டையன் சமீபத்தில் சசிகலாவை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் பரவியுள்ளன. இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்து செங்கோட்டையன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து, சசிகலா, “பொறுமையாக இருங்கள், இன்னொரு பிளவு ஏற்படக்கூடாது” என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சசிகலா தனது அணிகளை ஒன்றிணைத்து, எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், செங்கோட்டையனை அந்த பதவிக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிமுக தொண்டர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் உண்மை நிலை வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *