அதிகாரிகள் பின்னால் முதல்வர் ஸ்டாலின் மறைந்து கொள்வது ஏன் என அண்ணாமலை சரமாரி கேள்வி

அதிகாரிகள் பின்னால் முதல்வர் ஸ்டாலின் மறைந்து கொள்வது ஏன் என அண்ணாமலை சரமாரி கேள்வி

தமிழகத்தில் குற்றச்சாட்டுகள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் குளறுபடி நடப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 2021-ஆம் ஆண்டு என்சிஆர்பி தரவுகளுக்கும் தமிழக அரசு தற்போது வெளியிட்ட தகவல்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரிகளை கொண்டு தவறான புள்ளிவிவரங்களை திமுக அரசு பரப்புவதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக காவல்துறை மற்றும் உள்துறையை கவனிக்கும் முதல்வர் ஸ்டாலின், ஏன் அதிகாரிகளை முன்னிறுத்தி பின்னால் மறைந்து கொள்கிறார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு பதில் முதல்வரே மக்களுக்கு நேர்மையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *