அண்ணா அறிவாலயக் கூட்டத்திற்குப் பிறகு வெற்றிக் முழக்கமிட்ட அமைச்சர் துரைமுருகன்

அண்ணா அறிவாலயக் கூட்டத்திற்குப் பிறகு வெற்றிக் முழக்கமிட்ட அமைச்சர் துரைமுருகன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய வியூகங்கள் இக்கூட்டத்தில் வகுக்கப்பட்டன.

ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களம் இறங்கியுள்ள பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவின் வெற்றி உறுதி எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். உடல்நலம் தேறி முழுமையாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆட்சியைத் தக்கவைக்கத் தொண்டர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *