S-400 ஏவுகணைகளை கூடுதலாக கேட்கும் மத்திய அரசு
&w=640&resize=640,360&ssl=1)
இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் கூடுதல் தொகுதிகளைக் கோரியுள்ளது. எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொள்ளும் திறன் கொண்ட இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு ரஷ்யா விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின்போது, S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்திறன் இந்தியாவிற்குப் பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன ஏவுகணை அமைப்பு, சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் இலக்குகளைக் கூட கண்டறிந்து, 400 கிலோமீட்டர் தூரத்திற்குள் அவற்றை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. கூடுதல் S-400 ஏவுகணைகள் இந்திய விமானப் படைக்கு கிடைப்பதன் மூலம், நாட்டின் வான் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.