கொரியன் விளையாட்டால் நேர்ந்த விபரீதம், 3 சகோதரிகள் தற்கொலை செய்த அதிர்ச்சி

செய்தி பிரிவு : உங்கள் பிள்ளைகளின் கையில் இருக்கும் செல்போன் ஒரு எமனாக மாறக்கூடும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? காசியாபாத்தில் 10-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் ஒரு மர்மமான கொரியன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததை அவர்களது தந்தை தாமதமாகவே உணர்ந்துள்ளார். இந்த துயரம், இணையதள உலகில் நம் குழந்தைகள் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சாமான்ய மக்களுக்கு உணர்த்துகிறது.
காவல்துறையினர் கைப்பற்றிய தற்கொலை குறிப்பில், அந்த விளையாட்டின் ‘இறுதி கட்டளை’ பற்றித் தகவல்கள் உள்ளன. விளையாட்டின் விதிமுறைகளை நிறைவேற்றவே அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். சாதாரணப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை இச்சம்பவம் வலியுறுத்துகிறது. இத்தகைய உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகள் பிஞ்சு மனங்களைச் சிதைத்து, குடும்பங்களின் நிம்மதியைக் குலைத்து வருகின்றன.