IPL 2026: 3 வீரர்களை விடுவிக்க கும்ப்ளே வலியுறுத்தல்

இந்திய முன்னாள் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே, IPL 2025 சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாத சில முக்கிய வீரர்களை விடுவிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். முகமது ஷமி (SRH), ஆர். அஸ்வின் (CSK), வெங்கடேஷ் ஐயர் (KKR) ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதால், அவர்கள் அடுத்த மினி ஏலத்திற்கு முன் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில், ஜடேஜா, ரிஷப் பண்ட், மயங்க் யாதவ், ரஹானே, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜூரெல் போன்ற வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அணிக்காக முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதால், அவர்களை அணிகளில் தொடர வேண்டும் என்றும் கும்ப்ளே பரிந்துரைத்துள்ளார். அணியின் எதிர்காலத்தையும், வீரர்களின் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.