IPL: ஃபைனல் செல்வது யார்?

IPL: ஃபைனல் செல்வது யார்?

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் மிகுந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதன் முக்கிய கட்டமான பிளே ஆஃப் சுற்றுகள் விரைவில் தொடங்க உள்ளன. மே 29-ஆம் தேதி நடைபெறும் Qualifier 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும். இதன் மூலம் அந்த அணிக்கு பெரிய முன்னிலை கிடைக்கும்.

அடுத்த நாள், மே 30-ஆம் தேதி Eliminator சுற்று நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணிக்கு ஐபிஎல் பயணம் இங்கேயே முடிவடையும். அதேசமயம் வெற்றி பெறும் அணி, Qualifier 1-ல் தோற்ற அணியை எதிர்த்து Qualifier 2-ல் மோதும் வாய்ப்பு பெறும். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஃபைனலுக்குள் நுழையும். எனவே, எந்த இரண்டு அணிகள் ஃபைனலில் மோதப்போகின்றன? உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள்!

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *