EPFO EDLI திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள்: பணியாளர் குடும்பத்திற்கு அதிக பாதுகாப்பு

EPFO EDLI திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள்: பணியாளர் குடும்பத்திற்கு அதிக பாதுகாப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) தனது ஊழியரின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தில் மூன்று முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இவற்றின் மூலம் EPFO உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அதிக நிதி பாதுகாப்பை வழங்குவதாகவும், இறப்பு கோரிக்கைகளின் செயல்முறையை எளிதாக்கவும் உதவும் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான மாற்றங்கள் மூலம், EPFO உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பல முக்கிய நன்மைகள் கிடைக்கும்.

புதிய விதிகளின் படி, EPFO உறுப்பினர் ஒரு வருட சேவையை முடிக்கக்கூடிய முன்பே உயிரிழந்தாலும், அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ.50,000 வரை காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதனால், முன்பு இது போன்ற சூழல்களில் எந்த விதமான தொகையும் வழங்கப்படாது என்ற நிலை மாற்றப்பட்டது. இதேபோல், கடந்த சில மாதங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தாலும், அதன்பின் 6 மாதங்களுக்குள் உயிரிழந்தால், குடும்பம் EDLI திட்டத்தின் கீழ் பலன்களை பெற முடியும்.

மேலும், வேலையின் இடைவெளி காரணமாக காப்பீட்டு பலன்கள் பறிக்கப்படாமல் இருக்கும் நிலை, தற்போது மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகளின் படி, வேலை மாற்றத்தின் போது 2 மாதங்கள் இடைவெளி இருந்தாலும், அது தொடர்ச்சியான சேவையாக கருதப்படும். இதன் மூலம், உறுப்பினரின் குடும்பம் இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகையை பெற முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *