BREAKING: கற்றல் அடைவு தேர்வில் குமரி முதலிடம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3வது, 5வது மற்றும் 8வது வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் வகையில் ஒரு சிறப்பு தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் குமரி மாவட்டம் 66.55% மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து பிரமிக்க வைத்துள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், தொழில் வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழும் கோவை மாவட்டம், மாணவர்களின் கற்றல் திறனில் வெறும் 48.24% மட்டுமே பெற்றதால், கடைசி இடத்தில் தள்ளப்பட்டது. இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கடந்த வருடங்களுக்குப் பொதுத்தேர்வுகளில் பின்னடைவு கண்ட வட மாவட்டங்கள், இந்த கற்றல் அடைவு தேர்வில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது. இது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்வி தரத்தை சமநிலையில் கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.