AI கன்டென்ட்: 3 மணிநேரத்தில் லேபிளிங் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி!

AI கன்டென்ட்: 3 மணிநேரத்தில் லேபிளிங் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி!

மத்திய அரசு சமூக வலைதளங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கன்டென்ட்கள் மற்றும் டீப்ஃபேக் (Deepfake) வீடியோக்களுக்கு எதிராக புதிய கடுமையான விதிகளைக் கொண்டு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் உள்ளடக்கம் உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைத் தெளிவாகப் பிரித்துக் காட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:

  • 3 மணிநேர காலக்கெடு: AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை 3 மணிநேரத்திற்குள் ‘AI Generated’ என லேபிள் செய்ய வேண்டும். தவறினால் அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்படும்.
  • கட்டாய அறிவிப்பு: கன்டென்ட் கிரியேட்டர்கள் தாங்கள் பதிவேற்றும் வீடியோ அல்லது படங்கள் AI மூலம் உருவாக்கப்பட்டதா அல்லது மாற்றப்பட்டதா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
  • விரைவான நடவடிக்கை: சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் AI உள்ளடக்கங்களைச் சமூக வலைதள நிறுவனங்கள் 3 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் அனைத்து டிஜிட்டல் தளங்களுக்கும் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *