ஒருநாள் அரசு பொதுவிடுமுறை.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்
May 29, 2025

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளி வாழ்க்கை மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்கள் அடுத்த விடுமுறை எப்போது என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்குத் தேடிய சந்தோச செய்தியை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு தலைமை காஜி, ஜூன் 7-ஆம் தேதி பக்ரீத் (ஈதுல் அல்-அதா) விழா கொண்டாடப்படும் என நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அந்த நாளை அரசு பொதுவிடுமையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடுமுறை ஜூன் 7-ஆம் தேதி சனிக்கிழமையில் வருகிறது. அதற்குப் பின்வரும் நாள் ஜூன் 8 ஞாயிறு என்பதால், மாணவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையை அனுபவிக்கவிருக்கின்றனர். தொடர் விடுமுறையால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.