மகளிருக்கு ₹10 லட்சம் வரை கடன்.. விரைவில் அரசாணை

மகளிருக்கு ₹10 லட்சம் வரை கடன்.. விரைவில் அரசாணை

தமிழக அரசு, மாநிலத்தில் பெண்கள் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு முக்கியமான திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறது. இதன் கீழ், தகுதியான பெண்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதோடு, அரசு 20% வரை மானியமும் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக ஆண்டு தோறும் 20,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சம் மகளிருக்கு இக்கடன் உதவியாக அமையுமென திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெற்றுத் தேர்வு நடைமுறை விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி, மாநிலத்தில் பெண்கள் நடுநிலை மற்றும் சிறு தொழில்கள் தொடங்கும் எண்ணத்தை ஊக்குவித்து, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tama Sarkar
  • Tama Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *