சீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து
May 28, 2025

சீனாவின் சாங்டாங் மாகாணம், கவெமோ நகரத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஆலையை முழுமையாக தீ பிடித்து எரிந்தது. பல அடி உயரத்திற்கு புகை மற்றும் மிளிரும் எரிவாயுக்கள் அகிலமாக பறந்தன. தீவிபத்து ஏற்பட்டதும் ஊரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது சற்றே நிம்மதியான தகவலாக இருக்கிறது.
தீயை கட்டுப்படுத்தும் பணியில் 52 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் சுற்றுப்புற மக்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம்பெயர்த்தனர். தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.