29ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்குமா? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ரேஷன் கடைகளில் ஒத்திசைவு பணிகள் நடைபெறும் என்பதால், அந்த நாளில் பொருட்கள் வழங்கப்படாது.
அவ்வகையில், இந்த மாதத்தின் கடைசி வேலை நாள் மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் ரேஷன் கடைகள் இயங்காமல் இருக்க வாய்ப்பிருந்தது. மேலும், மார்ச் 30 ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பு மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், இந்த இரண்டு நாட்களும் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை தினங்களாகும்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வருகிற மார்ச் 29 ஆம் தேதி ரேஷன் கடைகளை இயல்புபோல் திறக்க அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் ரேஷன் அட்டைதாரர்கள் வழக்கம்போல் தங்களுக்கான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.