கனடாவில் வாழும் இந்திய மாணவனின் உருக்கமான பகிர்வு

ஒரு இந்திய மாணவர் கனடாவில் தற்காலிக வாழ்க்கையை வெளிப்படுத்திய உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி, வெளிநாட்டு வாழ்க்கையின் கடின உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த மாணவர், கனடா மற்றும் சில கல்லூரிகள் சர்வதேச மாணவர்களை வருமானமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். பெரும்பாலான மாணவர்கள் தனியார் அல்லது தரமற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அதிகக் கட்டணங்கள் செலுத்தும் நிலையில், தரமற்ற கல்வி மற்றும் பயனற்ற பட்டங்கள் அவர்களை மோசமான வேலை சந்தையிலேயே நிலைத்திருக்கச் செய்கின்றன என குற்றம்சாட்டினார். குறிப்பாக கல்கரி நகரில் உள்ள ‘Bow Valley College’ மிக மோசமான கல்வி நிலையமாக குறிப்பிடப்பட்டது.
மேலும், கனடாவில் வாழ்க்கைச் செலவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால், பெரும்பாலான மாணவர்கள் குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உணவு, வாடகை, மற்றும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்ற இந்த வேலைகள் அவசியமாகி விட்டது.
அதேபோல், உண்மையான நட்பு வட்டம் இல்லாமல், தனிமை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கிறது என மாணவர் கவலை வெளியிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் தரும் கனவு உண்மையில் ஒரு மாயைதான்; இந்தியாவில் இருந்து மேலோங்க அதிக வாய்ப்புகள் உள்ளன என அவர் இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.