ஆர்.சி.பி அணியில் நட்பின்மை காரணமாக கோப்பை வெற்றி குறைவு – ஷாதாப் ஜகாத்தி

:
கோப்பை வெற்றி இல்லாததால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள ஆர்.சி.பி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணி மீத்க் கடுமையான விமர்சனத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாதாப் ஜகாத்தி எழுப்பியுள்ளார். அவரது கூற்றுப்படி, அணியின் வீரர்கள் இடையே நட்பு மற்றும் ஒற்றுமை இல்லாததே அவர்களது தொடர்ச்சியான தோல்விக்குக் காரணம் எனக் கூறினார்.
ஒரு பேட்டியில் ஜகாத்தி கூறியதாவது, “கிரிக்கெட் என்பது குழுவாக விளையாடும் விளையாட்டாகும். வெற்றிப் பெற வேண்டுமெனில் அணியின் அனைத்து வீரர்களும் ஒன்றாக செயல்பட வேண்டும். ஆனால் ஆர்.சி.பி தொடர்ந்து 2-3 முக்கிய வீரர்களை மட்டுமே சார்ந்து செயல்படுகிறது. இதுதான் அவர்கள் கோப்பை வெல்ல முடியாததற்குக் காரணம்” என்றார்.
அத்துடன், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடையே சிறந்த ஒற்றுமை இருந்து வந்தது. அவர்களின் அணித்தலைமையும் சிறப்பாக இருந்தது. இதுதான் ஐ.பி.எல்.வில் சென்னை அணியின் 5 கோப்பை வெற்றிக்கு வழிவகுத்தது” என்றும் விளக்கினார்.
ஷாதாப் ஜகாத்தி 2010 ஆம் ஆண்டு சென்னை அணியில் விளையாடி கோப்பை வென்ற அனுபவமும் பெற்றுள்ளார். “ஒரு அணியை வெற்றிப் பாதையில் நடத்த முக்கியமானது அதன் மேலாண்மைதான். சென்னையின் அணித்தலைமை மிக சிறப்பாக செயல்பட்டதால் அவர்கள் வெற்றியை எளிதாக அடைந்தனர்” என குறிப்பிட்டார்.