இந்தியாவில் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வளையத்தில் தோனி வியந்து பாராட்டிய மைக்கேல் வாகன்

இந்தியாவில் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வளையத்தில் தோனி வியந்து பாராட்டிய மைக்கேல் வாகன்

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனிக்கு நாடு முழுவதும் கிடைக்கும் அளவற்ற மரியாதை குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்தியாவில் தோனி பயணம் செய்யும் இடமெல்லாம் அவருக்கு ஒரு பிரதமருக்கு வழங்கப்படுவது போன்ற பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அந்த அளவிலான மக்கள் செல்வாக்கை தோனி மட்டுமே பெற்றுள்ளதாக வாகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தோனியின் அமைதியான அணுகுமுறையும் வெற்றிகளை சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் குணமுமே அவரை மக்களின் இதயங்களில் நிலைக்கச் செய்துள்ளது. ஓய்வு பெற்று பல ஆண்டுகள் கடந்தும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை முன்னாள் வீரர் சாம் பில்லிங்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தோனி ஒரு சாதாரண கிரிக்கெட் வீரராக அல்லாமல் ஒரு மாபெரும் சக்தியாகவே பார்க்கப்படுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *