மத்திய கிழக்கு போர் எதிரொலி துபாயின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கடும் சரிவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த துபாய் தற்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கியதோடு, சுற்றுலாத் துறையும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொடர் வெடிச்சத்தங்களால் அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் நீண்டகால விசா வைத்திருப்பவர்கள் வெளியேறி வருவது அமீரகத்தின் பிம்பத்தைச் சிதைத்துள்ளது.
பாதுகாப்பு கருதி முக்கிய இடங்களைப் படமெடுக்க அந்நாட்டு காவல்துறை தடை விதித்துள்ளதுடன், விதிகளை மீறிய வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் துபாய் குறிவைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. போர்ச் சூழலால் சர்வதேச வர்த்தக மையமான துபாய் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதில் கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது.