குக்கே சுப்பிரமண்யர் கோவில்: பாம்புகளுக்கு திதி வழங்கும் அற்புதத் திருத்தலம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள குக்கே சுப்பிரமண்யா கோவில் ஒரு விநோதமான வழக்கத்தால் பிரசித்தி பெற்றது. இங்கு பாம்புகளுக்கு திதி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதன் மூலம் பித்ரு சாபம் மற்றும் சர்ப்ப தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.
இதற்குப் பின்னணி ஒரு பழம்பெரும் புராணக் கதையில் அடங்கியுள்ளது. கத்ரு, வினதை ஆகிய இரு சகோதரிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பெரிய பிரச்சினையாக மாறியது. கத்ரு தோல்வியடைந்து, அவளும், அவள் மக்களான நாகங்களும் வினதையின் கட்டுப்பாட்டில் வந்தனர். இதனால், கருடன் நாகங்களை அடிக்கடி துன்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் பாதிக்கப்பட்ட நாகங்கள், வாசுகி என்னும் ஐந்து தலை நாகத்தின் தலைமையில் குமாரதாரா நதி அருகே உள்ள ஒரு குகையில் மறைந்து, முருகனை வழிபட்டனர்.
சுப்பிரமணியர் அவர்களை காத்ததற்காக வாசுகி தனது ஐந்து தலைகளாலும் அவருக்கு குடை பிடித்தான். அதன் நினைவாக குமாரதாரா நதி கரையில் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இங்கு சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக சிறப்பு ஹோமம் நடைபெறும். இந்த ஹோமம் செய்ய பக்தர்கள் இரண்டு நாட்கள் கோவிலில் தங்க வேண்டியதுண்டு. கோவிலை சுற்றி அழகிய பசுமைச் சூழல் மற்றும் அருவிகள் உள்ளதால், இது ஆன்மிகத்துடன் இயற்கையை ரசிக்க ஏற்ற இடமாகும்.