கணவன்-மனைவி இணைந்து சேமிப்பில் வெற்றி! மாதம் ரூ.9,250 வருமானம் கிடைக்கும் திட்டம்

தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) என்பது நம்பகமான மற்றும் லாபகரமான சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒரே தடவையில் முதலீடு செய்து, மாதந்தோறும் நிலையான வருவாய் பெறலாம்.
இந்த திட்டத்தில் தனிப்பட்ட முறையில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆனால் கணவன்-மனைவி சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கினால், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 15 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.9,250 மற்றும் ஆண்டுக்கு ரூ.1,11,000 வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு செய்த முழு தொகையும் திரும்பக் கிடைக்கும்.
7.4% வட்டி வீதத்தில் இயங்கும் இந்தத் திட்டம், பாதுகாப்பான முதலீடாகும். குறிப்பாக, கணவன்-மனைவி சேர்ந்து சேமிக்க விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். குறைந்த பிரச்சினையுடன் அதிக வருமானம் பெறும் வாய்ப்பை தவற விடாதீர்கள்!