டாஸ்மாக் வசூல் அதிகரிப்பு: ரூ.1000 கோடி யாருக்கு செல்கிறது?

டாஸ்மாக் வசூல் அதிகரிப்பு: ரூ.1000 கோடி யாருக்கு செல்கிறது?

டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்பாக அரசியல் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒவ்வொரு குவாட்டர் பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.40 வசூலிக்கப்பட்ட விவகாரம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்விகள் எழுப்பியுள்ளார்.

எச்.ராஜா கூறுகையில், “தமிழகம் முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மதுபான பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.40 என கணக்கிட்டால், ரூ.1000 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இந்த கூடுதல் தொகை யாருக்கு செல்கிறது? இது எந்த விதத்தில் கணக்கில் காண்பிக்கப்படுகிறது?” என தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த புகார்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி, மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *