விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: நூற்பரிசில் பெரும் பாதிப்பு

விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: நூற்பரிசில் பெரும் பாதிப்பு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தால் இரு மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்த சுமார் 1,25,000 விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், தினசரி சுமார் 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ₹30 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் அடுத்தடுத்த நாட்களில் பாடி தொழிலாளர்களின் வருமானத்தையும் துணி தொழில் துறையின் செயல்பாட்டையும் பெரிதும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *