பாதுகாப்பு நவீனத்துவத்தை மேம்படுத்த அரசு திட்டம்

பாதுகாப்பு நவீனத்துவத்தை மேம்படுத்த அரசு திட்டம்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (DRDO) தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் பாதுகாப்பு நவீனத்துவத்தை வலுப்படுத்தவும், 15 நவீன அறிவியல் மையங்களை நிறுவவும் தயாராகியுள்ளது.

இந்த நவீன திட்டங்கள் மற்றும் தளவாடங்கள் இந்தியாவின் “மேக் இன்இந்தியா”த் திட்டத்தின் கீழ் தன்னாட்சி பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சரான சஞ்சய் செத், பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவலின் படி, இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகம் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி நிதி (TDF) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவில், ஆராய்ச்சி பணிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு உதவியாக அரசின் நிதி உதவி வழங்கப்படும்.

மேலும், DRDO ஆய்வகங்கள் உலகளாவிய முன்னேற்றங்களை அறிந்து, சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க சிறந்த வழிகாட்டுதலுக்கான ஆராய்ச்சி மேபுகளை உருவாக்கியுள்ளது. 15 ஐஐடி, ஐஐஎஸ்‌சி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து “தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்கள்” உருவாக்கப்பட்டுள்ளன. 84 முக்கிய ஆராய்ச்சி பகுதிகளில் இவை நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவியாக இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *