இந்தியாவுக்கே சொந்தமான புதிய பிரவுசர்: தரவு பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிரடி திட்டம்

பயனாளர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்தியாவிற்கே தனிப்பட்ட இணைய உலாவியை (Browser) உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பிரவுசர், இந்திய பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், நாட்டின் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, நடத்திய போட்டியில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முன்னணி டெக்னாலஜி வல்லுனர்கள் பங்கேற்றனர். இந்த முயற்சி மூலம், இந்தியாவுக்கே சொந்தமான பிரவுசர் உருவாகி, வெளிநாட்டு பிரவுசர்களை சார்ந்திருக்கும் நிலை குறையும்.
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “இந்த பிரவுசர் இந்தியாவின் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், குடிமக்களுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கும். இது தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னேற்றம்,” என்று தெரிவித்துள்ளார்.