உலகக்கோப்பை தோல்விக்குப் பின் ஓய்வு பெற முடிவெடுத்த ரோஹித்! மனதை மாற்றிய அந்த ஒரு காரணம் என்ன?
December 22, 2025

2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு, ரோஹித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பினார். நீண்ட கால உழைப்பிற்குப் பின் கிடைத்த இந்தத் தோல்வி அவரை நிலைகுலையச் செய்தது. தோல்வியின் வலியால் சில மாதங்கள் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அடுத்து வந்த டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உந்துதல் அவரை மீண்டும் களம் காண வைத்தது. குருகிராமில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தனது கனவை நனவாக்கவே மீண்டும் விளையாடத் தீர்மானித்ததாகக் கூறினார். இறுதியில் டி20 உலகக்கோப்பையை வென்று தனது இலக்கை எட்டினார்.