தென்றல் போலத் திரிந்த தரிசி: நடிகர் ரகுவரனின் நினைவுகள்

தென்றல் போலத் திரிந்த தரிசி: நடிகர் ரகுவரனின் நினைவுகள்

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரன். “I KNOW” என்ற வசனத்தால் மின்னல் போல் நினைவிற்கு வருபவர் இவர். வில்லன் கதாபாத்திரங்களில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய ரகுவரன், குணச்சித்திர வேடங்களிலும் கவனிக்கத்தக்க இடம் பிடித்தார்.

‘முதல்வன்’ படத்தில் முதல்வராகவும், ‘பாட்ஷா’ படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. சாதாரண வில்லனாக அல்லாமல் தனித்துவமான மாறுபட்ட பாணியில் அவரது நடிப்பு தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.

இன்று அவரது 17வது ஆண்டு நினைவு தினமாகும். அவரது வசனங்கள், நடிப்புத் திறன், மறக்க முடியாத சாயல் ஆகியவை தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் இடம் பிடித்திருக்கும். ரகுவரன் என்றாலே ‘I KNOW’ என்று சொல்லும் அந்த சத்தம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *