புதிய விதிகள்: ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி!

புதிய விதிகள்: ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி!

18-வது ஐபிஎல் தொடர் மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கின்றது. தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், கிரிக்கெட் பந்துகளில் எச்சில் பயன்படுத்துவதற்கும், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்துவதற்கும் புதிய விதிகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் 11 வது ஓவருக்குப் பின்னர், பந்துவீச்சாளருக்கு 2வது பந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்தப் புதிய விதி, பனியின் தாக்கத்தை சரிசெய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. பனியின் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில், பந்தை மாற்றுவது குறித்து நடுவர் முடிவெடுக்கப்போகின்றார். இது, பேட்டருக்கு சாத்தியமான சூழலை குறைக்கவும், பந்துவீச்சாளரின் சாதகமான நிலையை உறுதிப்படுத்தவும் உதவும்.

மேலும், பிற்பகல் போட்டிகளில் இந்த விதி பயன்படுத்தப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *