கோலாபுரி செருப்பு சர்ச்சை: ₹83,000 விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய சண்டலை அறிமுகப்படுத்தும் பிராடா!

கோலாபுரி செருப்பு சர்ச்சை: ₹83,000 விலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய சண்டலை அறிமுகப்படுத்தும் பிராடா!

பாரம்பரிய கோலாபுரி செருப்புகளின் வடிவமைப்பைத் திருடியதாக எழுந்த சர்ச்சைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, இத்தாலிய ஆடம்பர ஃபேஷன் பிராண்டான பிராடா, இந்திய கைவினைஞர்களுடன் இணைந்து லிமிடெட் எடிஷன் சண்டல் கலெக்‌ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. சுமார் ₹83,000 விலையுள்ள இந்த சண்டல்களை மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 2,000 கைவினைஞர்கள் தயாரிப்பார்கள். பாரம்பரிய இந்திய கைவினைத்திறனை இத்தாலிய நுட்பத்துடன் இணைப்பதே பிராடாவின் நோக்கம் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி லோரென்சோ பெர்டெல்லி தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, விளிம்புநிலை சமூகங்களில் இருந்து வரும் பாரம்பரிய செருப்பு தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் மகாராஷ்டிராவின் LIDCOM மற்றும் கர்நாடகாவின் LIDKAR போன்ற அரசு நிறுவனங்களுடன் பிராடா கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சண்டல்கள் 2026 பிப்ரவரி முதல் உலகெங்கிலும் உள்ள 40 பிராடா கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். கைவினைஞர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்குவதை உறுதிசெய்யும் பல மில்லியன் யூரோ திட்டமிது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *