மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பு! வீட்டுக்கடன் வட்டி விகிதம் எவ்வளவு?

மத்திய அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் கனவை எளிதில் நிறைவேற்ற மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (HBA) திட்டத்தின் கீழ், ஊழியர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடியும். பாதுகாப்பான மற்றும் வசதியான குடியிருப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், ஒரு ஊழியர் தனது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவற்றின் 34 மடங்கு அல்லது அதிகபட்சமாக ₹25 லட்சம் வரை கடனாகப் பெற முடியும்.
இந்த HBA கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக 6% முதல் 7.5% வரை நிலையானதாக உள்ளது, இது தனியார் வங்கிகளின் விகிதத்தை விட மிகக் குறைவு. மேலும், கடன் காலம் முழுவதும் இந்த விகிதம் மாறாது. ஐந்து ஆண்டுகள் அரசுப் பணி மற்றும் வேறு எந்த அரசு வீட்டுவசதி நன்மையையும் பெறாத நிலையில், நிரந்தர மற்றும் சில தற்காலிக ஊழியர்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். செயல்முறையை அரசு மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.