அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்! கணவன்-மனைவி ₹22 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்திற்கு ₹45,100 கிடைக்கும்

ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் நின்றுபோகும் கவலையைப் போக்க இந்திய அஞ்சல் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒரு சிறந்த தீர்வாகும். தற்போது ஆண்டிற்கு 8.2% வட்டி விகிதத்துடன், இது அஞ்சலக திட்டங்களிலேயே மிக உயர்ந்த வருமானத்தை வழங்குகிறது. முதியோர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிறப்புத் திட்டம், காலாண்டு அடிப்படையில் வட்டி செலுத்துவதன் மூலம் உறுதியான வருமானத்தை உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து மொத்தமாக ₹22 லட்சம் (தலா ₹11 லட்சம்) ஒரே தவணையில் முதலீடு செய்தால், அவர்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ₹45,100 வட்டியாகக் கிடைக்கும். இதன்மூலம், சராசரியாக அவர்களுக்கு மாதத்திற்கு சுமார் ₹15,000 வருமானம் கிடைக்கும். ஐந்து வருட முதிர்வு காலத்தில், இந்தத் தம்பதி மொத்தமாக ₹9,02,000 வட்டி ஈட்ட முடியும். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்த கணக்கைத் திறக்கலாம் மற்றும் குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.