ஷேக் ஹசீனா மரண தண்டனைக்கு எதிர்ப்பு

Bangladesh: ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி அவாமி லீக் அழைப்பு விடுத்துள்ளது. இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸின் ராஜினாமாவை வலியுறுத்தி நவம்பர் 30 வரை இந்த ஆர்ப்பாட்டம் நீடிக்கும். சட்டவிரோதமாகப் பதவியில் இருக்கும் யூனுஸின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட நீதிமன்றம் வழங்கிய ‘கேலிக்கூத்தான’ தீர்ப்பை நிராகரித்ததற்காக மக்களுக்கு கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்கதேசத்தில் ஊதியம் மற்றும் பதவி உயர்வு கோரி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும், ஈஷன்டைக் (Blasphemy) குற்றச்சாட்டுகளின் பேரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகள், தாக்குதல்கள் மற்றும் கைதுகளை முடிவுக்குக் கொண்டு வரக்கோரி நூற்றுக்கணக்கான குடிமக்கள் கூட்டாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ‘பவுல்’ பாடகர் அபுல் சர்க்கார் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், மத அடிப்படைவாதம் முடிவுக்கு வரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.