உலக புகழ்பெற்ற அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்

உலக புகழ்பெற்ற அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்

உலகம் முழுவதும் அனிமே ரசிகர்களை கவர்ந்த ஜப்பானிய அனிமேட்டர் ஷிகேகி அவாய் 71 ஆம் ஆண்டு வாழ்நாளை கடந்த மார்ச் 19ஆம் தேதி காலமானார். அவர் உலகளாவிய அளவில் பிரபலமான “நருட்டோ”, “ஒன் பீஸ்”, “பொருட்டோ”, “ஷிப்புடென்” மற்றும் பல பிரபலமான அனிமே தொடர்களுக்கு உயிர்கொடுத்தவர்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக அனிமே துறையில் பணியாற்றிய ஷிகேகி, 500-க்கும் மேற்பட்ட அனிமேக்களில் பங்களித்து தன் கலைத்திறமினை உலகுக்கு வெளிப்படுத்தினார். “ஒன் பஞ்ச் மேன்”, “பைபிளேடு”, “டோக்கியோ அண்டர்கிரௌண்ட்”, “அட்டாக் ஆன் டைட்டன்ஸ்” போன்ற பிரபல அனிமே தொடர்களில் உள்பட, பலதரப்பட்ட தொடர்களில் தன் சிறந்த இயக்குநரின் கையால் வழிகாட்டியுள்ளார்.

ஷிகேகி அவாயின் மறைவுக்கு உலகம் முழுவதும் அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் இறப்பதற்கு முன்பு “தி மிஸ்ஃபிட் ஆஃப் டீமன் கிங் – 2”, “உசுமாகி”, “டெர்மினேட்டர் ஜீரோ”, “சூசைடு ஸ்குவாட்” போன்ற முக்கியமான அனிமே தொடர்களில் பணியாற்றியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *