சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம்

சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் இன்று மாலை, முதன்முறையாக ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இந்த சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரை 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை செய்யப்படுகிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம், 63,246 கோடி ரூபாயை மதி பண்ணி 118.9 கிலோமீட்டர் தொலைவு மற்றும் 128 ரயில் நிலையங்களை கொண்டதாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் போரூர் வரை 26.1 கிலோமீட்டர் தொலைவுக்கு முதல் கட்டம் இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் 9 உயர்மட்ட ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயிலின் இந்த முன்னேற்றம், சென்னை நகரின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் மக்களுக்கு எளிதான பயண அனுபவத்தை வழங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *