பொய் சொல்ல வேண்டாம்! நீதிபதிகள் அமலாக்கத்துறையை கடிந்துகொண்டனர்

சென்னை: சென்சேஷனலாக எடுக்கப்பட்ட டாஸ்மாக் சோதனையைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீது கடுமையான கேள்விகள் எழுந்தன. “பொய் சொல்ல வேண்டாம்… அனைத்தும் செய்தித்தாள்களில் வந்துள்ளது,” என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “இரவில் சோதனை நடத்தப்படவில்லை, அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்” என்ற உரையை முன்வைத்தபோது, நீதிபதிகள் அதற்கு பதிலாக, “செய்தித்தாள்களில் ஏற்கனவே அனைத்து விவரங்களும் வெளிவந்துவிட்டன, எதையும் மறைக்க தேவையில்லை” என வாக்குமூலம் கூறினர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த சோதனை தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரிகள், சட்டவிரோதமான முறையில் அவதூறாக சோதனை நடத்தப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதில், அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர், மேலும் அந்த சோதனை தமிழக அரசின் அனுமதியின்றி நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது நடவடிக்கைகளின் முழு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதி வரை தள்ளி வைத்தனர்.