மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? ‘இருமுறை இறந்து’ திரும்பிய பெண் கூறும் அதிர்ச்சித் தகவல்

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது எப்போதும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பெக்கி ராபின்சன் என்ற பெண், தான் இருமுறை ‘இறந்து’ மீண்டும் உயிர்பெற்றதாக ஒரு திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். 25 வயதில், கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, தனது ஆன்மா உடலை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தைக் கடந்து ஒரு பிரகாசமான வெள்ளைக் அறைக்குச் சென்று, அங்கு கடவுளைச் சந்தித்ததாக அவர் கூறுகிறார்.
கடவுள் தன்னைக் கூப்பிட்டபோது, தனது குழந்தைகளை விட்டு வர மறுத்து அவருடன் வாதிட்டதாக பெக்கி ராபின்சன் கூறுகிறார். பிறகு, தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்த்த பிறகு, அவரது ஆன்மா உடனடியாக அவரது உடலுக்குள் திரும்பிவிட்டதாம். மருத்துவர்கள் அவரது உயிர் பிழைக்கும் நம்பிக்கையை கைவிட்டிருந்தாலும், அவர் உயிர் பிழைத்தார். எனினும், தனது இரட்டைக் குழந்தைகளை இழந்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, கடவுள் மக்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்காகவும், யாரும் தனியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்வதற்காகவும் அவர்களை உயிருடன் வைத்திருப்பதாக பெக்கி நம்புகிறார்.