ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஜிஎஸ்டி குறைப்புக்கு பிறகு ‘ரெயில் நீர்’ பாட்டில் விலை குறைப்பு
September 20, 2025

ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ரயில்வே ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி விகிதங்கள் குறைந்ததைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் ‘ரெயில் நீர்’ பிராண்ட் குடிநீர் பாட்டில்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது, ஒரு லிட்டர் பாட்டில் ₹15-க்கு பதிலாக ₹14-க்கும், அரை லிட்டர் பாட்டில் ₹10-க்கு பதிலாக ₹9-க்கும் கிடைக்கும்.
ரயில்வே அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, ஜிஎஸ்டி குறைப்பின் நேரடிப் பலனை பயணிகளுக்கு வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. இந்த முடிவு லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.